Friday, March 20, 2009

வெளிநாட்டுக் கதைகள்









சிறுகதைத் தொகுப்புப் பற்றிய அறிமுகக் குறிப்பு

-ச. இரத்தினசேகரன்-

நூல் :- வெளிநாட்டுக் கதைகள்

புலம்பெயர் படைப்பாளிகளின் சிறுகதைகள் சில)

தொகுப்பு :- சு. குணேஸ்வரன்

வெளியீட்டாளர் :- இராசையா ஐங்கரன் (சுவிஸ்)>

முகவரி :- ‘ஐங்கரபதி’> மயிலிட்டி> அல்வாய்.

திருமதி இராசையா தவமணிதேவி அவர்களின் முப்பத்தோராவது நாள் நினைவாக வெளியீடு செய்யப்பட்ட ‘வெளிநாட்டுக் கதைகள்’ என்ற தொகுப்பு நூலை திரு சு. குணேஸ்வரன் தொகுத்துள்ளார்.

இந்த நூலைப்பற்றி ஒரு வாசகனின் கருத்தை மட்டுமே இங்கு காணமுடியும். தொகுப்பாளரைப் பற்றிய ஒரு செய்தியை நான் குறிப்பிட்டாக வேண்டும். இலக்கிய உலகில் உ. வே. சாமிநாதையர்> சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோர் ஏடுகள் தேடி கிராமம் கிராமமாக அலைந்த காலங்களை நாம் படித்துத் தொpந்து கொண்டிருக்கிறோம். அதேபோன்று புலம்பெயர் படைப்பாளிகளின் இலக்கியங்களை தேடிச்சேகாpத்து வெளிநாட்டில் வாழ்பவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி உரிய புலம்பெயர் படைப்பாளிகளின் இலக்கியங்களைப் பெற்றவர். இவர் இத்தகைய நூலைத் தொகுத்ததற்கான காரணத்தை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். எங்கோ இருக்கும் படைப்பாளிகளின் கதைகளை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நல்நோக்கத்தை மனதில் நிறுத்தி இவ்வாறான அளப்பரிய கைங்காpயத்தைச் செய்துள்ளார். அதாவது தான் படிக்கும் காலத்தில் தான் பட்ட சிரமங்களை வருங்கால மாணவர் சமூகம் அனுபவிக்கக் கூடாது என நினைத்து இவ்வாறான தொகுப்பைச் செய்துள்ளார்.

இத்தொகுப்பு நிச்சயமாக மாணவர் சமூகத்திற்கு ஏற்புடைய தொகுப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை. இதிலிருந்து ஒன்று புலனாகிறது சுயநலமில்லாத ஒரு படைப்பாளனின் தொகுப்பாகவே இதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இவரது முன்மாதிரியான போக்கு சமூகத்திற்கு உயர்வாகவே கருதுவேண்டியுள்ளது.

முன்னட்டையை அலங்காpப்பது மறைந்த ஈழத்து ஓவியர் மாற்கு அவர்களினதாகும். இந்தச் சித்திரம் பேசுகிறது. எமது வாழ்வின் அவலங்களை எடுத்து வைக்கிறது. நடந்து நடந்து களைத்துப்போய் செருப்பைக் காலாறக் கழட்டிவிட்டு கணவனும் மனைவியும் ஒரு மரத்து நிழலில் ஆழ்ந்த சிந்தனையோடு இருப்பதை சித்திரம் பேசுகிறது. அத்தோடு தரையில் புத்தகம் இருக்கிறது. எமது கல்விநிலைமை எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்த்துவதாக இந்தச் சித்திரம் அமைந்துள்ளது. சொந்த நாட்டில் இருப்பதற்கு இடம்தேடி அலையும் மக்களின் துயரங்கள்கூட கண்முன்னே காட்சியாய் வந்து போகின்றது.

வெளியீட்டுரையில் வெளியீட்டாளர் இராசையா ஐங்கரன் ஒரு கருத்தை முன்வைக்கின்றார். உயர்வகுப்பு மாணவர்களுக்கும் பயனளிக்கக்கூடிய இந்நூலை கூடியவரையில் மற்றவர்களுக்கும் கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறார். இவரும் இந்த நூலின் அருமை பெருமைகளை நன்றாக உணர்ந்திருக்கிறார்.

தொகுப்பாளரான திரு சு. குணேஸ்வரன் தொகுப்புரையில் இந்நூலின் அவசியத்தை வெளிப்படுத்துவதோடு அவரால் தொpவுசெய்யப்பட்ட எட்டுக் கதைகள் பற்றி ஒரு சிறிய குறிப்புகளைத் தந்துள்ளார். ஒவ்வொரு குறிப்பையும் படிக்கிறபோதே வாசகன் படித்துப் பார்க்கவேண்டும் எனத்து}ண்டப்படுவான்.

தலைமைத்துவத்தைப் பற்றிக் கூறவரும் அறிஞர்கள் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள் ‘து}ண்டல் துலங்க வைத்தல்’ என்ற சொற்பதத்தை உபயோகிப்பது இவரது ஒவ்வொரு கதைக்குமுரிய குறிப்பு பொருத்தமாக இருக்கிறது.

முதலாவதாக இந்நூலில் வரும் கதையாக அ. முத்துலிங்கத்தின் ‘அம்மாவின் பாவாடை’ அமைந்துள்ளது. யாழ்ப்பாணச் சமூத்தில் சிலரது வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறார். வரட்டுத்தனமான கெளரவங்களுக்குள் தம்மை ஆட்படுத்தி தாமும் சிதைந்து மற்றவர்களையும் சிதைக்கும் வேலையில் ஈடுபடும் பாத்திரம் இங்கே படைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள் ‘கோபம் வந்தால் நிதானம் தவறக்கூடாது’ என்று. மகன் எதிர்வீட்டுப் பையனைத் திட்டிய வார்த்தை பிடிக்காமல் கோபப்பட்டு அவனது அம்மா சொண்டில் விரல்களால் சுண்டுவதும் கிராமத்தில் கூடக் கிடைக்கக்கூடிய பூவரசம் தடியால் அடிப்பதும் கண்டிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாகும். அதே சமயம் அம்மா ஒரு சந்தர்ப்பத்தில் மகன் கூறிய வார்த்தையை கூறுவதாக அ. முத்துலிங்கம் எழுதுகிறார். பெரியவர்கள் எவ்வளவு பொறுப்போடு நடக்கவேண்டும் என்பதை இந்தக் கதையின் வாயிலாக உணர்த்தியும் விடுகின்றார்.

கி. பி. அரவிந்தனின் ‘நாடோடிகள்’ என்ற கதையானது மனதைப் பிழிந்து எடுத்தது என்றே கூறவே வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் குடும்பத்தின் கதை. அந்தோ அவர்கள் வாழ்வு துடித்ததை கி. பி. அரவிந்தன் காட்டுகிறார். நாட்டில் தங்கியிருக்க அநுமதி மறுக்கப்பட்டபோது மனைவி கூறுகிறாள் ‘நாடோடிகள் மாதிரியல்லோ ஆகிப்போச்சு இது இத்தாலியில் உண்டாகியது இங்கு பிறந்தது இப்ப ஒன்று இங்கை உருவாகி இருக்கு எங்க பிறக்கப்போகுதோ?’ மனைவி கூற கணவன் அழுகிறான். எங்கள் சமுதாயம் எப்படி எல்லாம் போகிறது என்பதை ‘நாடோடிகள்’ புலப்படுத்துகிறது.

க. கலாமோகனின் ‘உருக்கம்’ யாவரையும் உருக வைக்கும் கதை. தொழில் அநுபவம்> தொழிலின் முக்கியத்துவம் என்பவற்றைக் குறிப்பிட்டுக் காட்டி கதையில் வரும் இலங்கை இளைஞன் தனது குடும்பத்திற்காக தனக்கேற்படும் அவமானங்களை எவ்வாறு தாங்குகிறான் என்பதைக் காட்டுகிறது.

‘ரகசிய ரணங்கள்’ என்ற கதைவாயிலாக அருண் விஐயராணி ‘வீணா’ என்னும் பாத்திரத்தின் மூலமாக போலியான வாழ்வைத் தேடி ஒடி தாமும் கெட்டு பிள்ளைகளையும் சீராக்க முடியாமல் இருப்பதைக் காட்டுவது வாசகனுக்கு பெரிய அந்தரமாக இருக்கிறது.

பார்த்திபனின் ‘தொpயவராதது’ சில விடயங்களைத் தொpயப்படுத்தியதால் நெஞ்சு கனதியாகி விட்டது. வறுமையில் வாடும் குடும்பத்தை நினைத்து தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் ஒரு நீக்கிரோவின் பெயரில் சுவிஸ் போகிறான். யாருக்குமே தொpயாது விமானம் விபத்தில் சிக்கி அவன் இறக்கிறான். வீட்டில் அவன் இன்னும் இருப்பதாக நினைக்கிறார்கள்.

பெண் படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ராNஐஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘எய்தவர் யார்?’ என்ற சிறுகதை துவேச உணர்வை வெளிப்படுத்தும் கதையாக அமைந்துள்ளது. உலகம் விசாலமானது எனச் சொல்வார்கள் ஆனால் அதற்குள்ளேயே இந்த இழிநிலைகளும் உண்டு என்பதைக் கதை காட்டுகிறது.

சுருதியின் ‘ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீள முடியும்’ என்ற சிறுகதையில் வாழப்பிடிக்காமல் குழந்தையோடு செத்துக் கிடந்தாள். பெண் அடிமைத்தனம் எதுவரை பாய்கிறது. என்பதை புரியவைக்கும் கதை.

‘புதிய தலைமுறை’ கோவிலூர் செல்வராஜனின் கதையாகும். அவரது நோர்வேக் கதையானது படிக்கும்போது எமக்கு அருகிலேயே நடப்பதாக இருக்கிறது. பணம்> பகட்டான வாழ்வு> பிள்ளைகளோடு கதைப்பதற்கு நேரமில்லாமல் தம்மை இயந்திரமாக்கித் திரியும் பெற்றார்கள் நிலை> இவற்றுக்கிடையில் ஸ்டெல்லா மாதிரி பொலிஸில் மட்டும் முறைப்பாடு கொடுக்கவில்லை. வளர்ந்து வரும் சில பிள்ளைகள் முரண்டு பிடித்தாலும் தமது பண்பாட்டிலிருந்து இறங்காமல் இருப்பதால் கட்டமைப்புக் குறையாமல் குடும்பங்கள் இருப்பதை உணர்த்துகிறது.

மிகக் கனதியான தொகுப்பாக இது அமைந்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதை எல்லாம் இந்த நேரத்தில் கொண்டுசென்று கொடுக்க முடியுமோ அதை இலக்கியப் படைப்புகள் வாயிலாக கொடுக்கும் ஆசிரியர் சு. குணேஸ்வரனின் மகத்தான தொண்டு யாவரும் நன்கு உணர்ந்த ஒன்றாகும்.

அல்வாய் கிராமத்திற்கு இவ்வாறான எண்ணம் இன்று நேற்று வந்ததல்ல. ஐம்பத்திரண்டில் மு. செல்லையாவின் தொகுப்பான ‘வளர்பிறை’ வளர்த்துவிட்ட மரபுகள் அவை. அந்தத் தொடர்ச்சி மிக மகத்தான நூல்களை எல்லாம் முப்பதியோராவது நாள் நினைவாக வெளிவர வைத்துள்ளது. எந்தத் துறைசார்ந்த நூல்கள் வெளிவரவில்லை என்று தேடவேண்டியுள்ளது. இக்கிராமத்தில் மதுரன் அச்சுக்கூடமே இருக்கிறது இவர்களது பணிகுறிப்பிட வேண்டும். மழலைகளைத் தாலாட்டும் பாட்டிலிருந்து இளைஞர்களை சிந்திக்கத்து}ண்டும் நூல்கள் வரை வந்துவிட்டன. நிறுவன ரீதியாக செய்யக்கூடிய பல பணிகளை குடும்பங்களாக செய்கின்றனர். தமிழுக்கு உரம் சேர்க்கின்றனர். இவை எல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மையென்பது எனது கருத்தாகும்.

-----

No comments:

Post a Comment